ஆஸ்திரேலியாவின் மையப்படுத்தப்பட்ட ஊடக அமைப்பும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும், நாம் ஆன்லைனில் பெறும் தகவல்களை கட்டுப்படுத்தும் சிக்கலான அமைப்பை உருவாக்கியுள்ளது. இது சமூகத்தையும் நம்பிக்கையையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் டிஜிட்டல் தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவை, அதிக கிளிக்குகளையும் , பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்திலும், பரபரப்பூட்டும் தலைப்புகள் மற்றும் செய்திகளை வெளியிட ஊடக நிறுவனங்களை ஊக்குவித்து வருகின்றன.
இந்த நிலைமை பலரிடையே “ (learned helplessness) “ என்ற மனநிலையை உருவாக்கி வருவதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் உளவியல் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் மைக்கேல் நோடெல் SBS Examines-க்கு தெரிவித்தார்.
It can feel like some of the problems facing humanity are too big for us to do anything about. And that means that we don't act. I think that's a real tragedy.
“போர் மற்றும் மோதல்கள் போன்ற பிரச்சினைகள் குறித்து நாம் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் , தொடர்ந்து செய்திகளைப் பின்தொடர்வதன் மூலம் ஏதோ செய்கிறோம் என்ற உணர்வு மக்களுக்குள் உருவாகிறது,” என்று அவர் கூறினார்.
“உண்மையில் நாம் செய்யக்கூடிய முக்கியமான செயல்கள் இருந்தபோதிலும், எதையும் மாற்ற முடியாது என்ற உணர்வு பலரிடம் உருவாகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.
SBS Examines நிகழ்ச்சி ஆராயும் தலைப்பு: பெரிய ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆஸ்திரேலியர்கள் தினமும் பெறும் செய்திகளை எவ்வாறு வடிவமைக்கின்றன? மேலும், அவை உலகைப் பற்றிய நமது பார்வையை எவ்வாறு பாதிக்கின்றன?





