இலங்கையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் "ஈழத்தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்" எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு 13வது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நிறைவேற்ற இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பியிருந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குவதற்காக இந்த மக்கள் கருத்தமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



