இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், மகாவலி நதி நீர் திட்டம், மற்றும் படைத்தரப்பினர் என பலதரப்பும் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதி எனவும், அவர்களது தேவைகளுக்காகவும், அடையாளப்படுத்தப்பட்ட பல இடங்களை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பது தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி விடயமாக உள்ளது.
இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் பொதுமக்களின் வாழ்பாட்டுக்கு தடைவிதித்திருப்பதாக கூறப்படும் நிலையில், குருந்தூர் மலையில் நீதிமன்ற தடையையும் மீறி தற்போது பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




