இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கால்நடைப் பண்ணையாளர்கள் மேற்கொண்ட முயற்சியை பொலிஸார் தடுத்ததாக தெரிவித்து கால்நடைபண்யையாளர்கள் போராட்டம் நடாத்தியுள்ளார்கள். மற்றும் நாட்டைவிட்டுச் சென்றுள்ள நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் சட்டத்தரணிகள் போராட்டம்.
இந்த செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





