மலையக பெருந்தோட்டங்களில் பணியாற்றும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள்,மற்றும் போராட்டங்களின் பின்னர் தற்போதுள்ள அரசு அவர்களின் நாளாந்த ஊதியமாக ஆயிரம் ரூபாவினை வழங்க ஏற்பாடு செய்துள்ள போதிலும், அதனை வழங்கும் முயற்சியில் பெருந்தோட்ட நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பெருந்தோட்ட பணியாளர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் இதனால் தாம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில் தற்போது தமது பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




