நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் அவதூறாகப் பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜகவின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை கண்ணன், நெல்லையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை விரைவில் கைது செய்யவேண்டும் என்று தமிழக பாஜவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! வழங்குகிறார் எமது இந்தியா நிருபர் ராஜ்.
Share




