சில தினங்களுக்கு தமிழக பா.ஜ.க தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் திருவள்ளுவர் காவி நிற ஆடையுடன், இந்து மதக் குறியீடுகளான பட்டை நாமம், ருத்ராட்சம் அணிந்த நிலையில் காணப்பட்டார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ திருவள்ளுவர் ஒரு ஹிந்து என்று மீண்டும் கருத்துக்களை கூற தமிழக அரசியல் களத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதே நேரம் இது ஒரு தேவையற்ற விவகாரம் என்றும், அரசியல் காட்சிகள் தேவையில்லாமல் இந்த சிறிய விவகாரத்தை சர்ச்சையாக்கிவருவதாக பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர்!!
Share




