Demonstrators gather behind a police barricade during a protest against a new citizenship law Source: X90166
இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய முழுவதும் எதிர் காட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து நாடு முழுவதும் மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை, அந்த பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய முழுவதும் எதிர் காட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து நாடு முழுவதும் மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை, அந்த பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.