மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபபடி செய்தது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டது. இது போன்ற சூழ்நிலையில் தாம் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இது போன்ற சூழ்நிலையில் அமலாக்கத்துறை ப.சிதம்பரம் வெளிநாடு செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது இந்திய அமலாக்கத்துறை. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




