கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். இது வெறுமனே இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து அல்ல என்றும் தீண்டாமை காரணமாக கருங்கல்லினால் அபாயகரமான இந்த சுவர் கட்டப்பட்டதாக குற்றசாட்டை முன்வைக்கின்றனர் பல்வேறு அமைப்பினர். தீண்டாமை சுவரே மரணத்திற்கு காரணம் என்று விபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இது விபத்து என்று மற்றொரு தரப்பினர் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வருக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.
Share




