சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் தமிழர்களின் பெரும் பெருமையை உலகிற்கு சொல்ல காத்து இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்து இருக்கும் சிறு கிராமமான கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதுவரை உலகில் சிந்து சமவெளி நாகரீகம் பழமையானது என கருதப்பட்டு வந்த நிலையில் கீழடியில் கிடைத்த பொருட்கள் அந்த கருத்தை மற்றும் வகையில் உள்ளது. தொடர்ந்து கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கீழடி குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் தற்போது #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்து வருகின்றனர்.அந்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதே நேரம் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை வட இந்திய ஊடகங்கள் திரித்து கூறுவதாகவும் கண்டங்கள் எழுந்து வருவதும் நோக்கத்தக்கது. கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து ஒரு பார்வை. முன் வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர்!
Share




