தமிழகப் பார்வை! நெடுவாசலில் 14வது நாளாக போராட்டம்
SBS Tamil Source: SBS Tamil
ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் பதினான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹைட்ரொ கார்பன் திட்டத்தை நிறுத்தினால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதே நேரத்தில் இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர். போராட்டத்தின் தற்போதய நிலை என்ன? விளக்குகிறார் தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



