Focus: பரோல் கேட்ட சசிகலா

Source: Getty
கவலைக்கிடமாக உள்ள தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாள் பரோல் கேட்ட சசிகலாவின் விண்ணப்பத்தை கர்நாடக சிறை துறை நிராகரித்தது. நடராஜனின் உடல்நிலை சரியில்லை என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற காரணத்தை கூறி அவரின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டது. சசிகலா பரோலில் வெளியே வந்தால் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா தரப்பில், சிறைத்துறை கேட்ட ஆவணங்களுடன் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது. சசிகலா பரோலில் வெளியே வந்தால், தமிழக அரசியலில் ஏற்படப்போகும் தாக்கம் என்ன? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



