கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரத்தில் இன்னும் சில சிலமணி நேரங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறவுள்ளது. வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படும் இந்த இரு பெரும் தலைவர்களில் சந்திப்பு இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவையும், பாரம்பரியத்தையும் பகிர்ந்துகொள்ளும் திருப்புமுனை சந்திப்பாக அமையும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த பல வருடங்களாக இந்திய மற்றும் சீன இடையே நீடித்து வரும் கருத்து வேறுபாடுகள் இந்த சந்திப்பின் மூலம் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்! கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




