இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. ஆனால் பாஜக அரசோ, பொருளாதார நெருக்கடி என்பது தாற்காலிகமானது என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர, இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்க முன்வந்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்!
Share




