தமிழகப் பார்வை!: நடிகைகள் பஞ்சாயத்துச் செய்யலாமா?
TN Source: TN
தமிழக தொலைக்காட்சிகளில் நடைபெற்று வரும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை கோரி வலுப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் குஷ்பூ, தெலுங்கில் கீதா ஆகியோர் தம்பதிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளால் குடும்ப பிரச்சனை மேலும் அதிகமாவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் தீமை மட்டுமே ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகளிலேயே பல பஞ்சாயத்து நடந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share


