முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சீமானின் பேச்சுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் . இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தாம் பேசிய பேச்சை திரும்ப பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சீமான். சீமானின் சர்ச்சை பேச்சு தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்கள் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Share




