இந்தியாவில் சிறுவர் சிறுமி ஆகியோரின் பாலியல் படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் சிறார் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




