தமிழ்நாட்டின் சிதம்பரம் கோவிலில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிடசென்ற போது அங்கிருந்த தீட்சிதர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி திட்டி தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த பெண், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலிலுள்ள 20 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share



