தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இடை தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைதேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. ஆளும் கட்சியான அதிமுகவும் இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்த இடை தேர்தல் முடிவுகள் எந்த வித அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை என்றாலும், திமுக அணிக்கும் அதிமுக அணிக்கும் இந்த தேர்தல் மிக பெரிய கௌரவ பிரச்சனையாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இடை தேர்தல் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share




