தலைக்கூத்தல் என்ற சடங்கு செய்து, நோயுற்ற முதியோர்களை, சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யும் ஈவு இரக்கமற்ற கொலை பாதகச் செயல் கருணைக்கொலை என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.பல்கலைக் கழக மானியக் குழு ஏற்பாட்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை துணை பேராசிரியர் எம். பிரியம்வதா இது குறித்து மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதியர் கொலைகள் பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் மேற்கெண்ட ஆய்வு குறித்து பேராசிரியர் எம். பிரியம்வதா, குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார்.
Share




