நாடுகடத்தலை எதிர் கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என ஃபெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நேயர்கள் அறிந்த செய்தி.
இந்த நேர்காணலில், பிரியா-நடேஸ் தம்பதியின் மூத்த மகள் கோபிகா தனது ஆதங்கங்களைப் பகிர்கிறார். அத்துடன், இந்தத் தீர்ப்பு குறித்தும், நாட்டையே கொரோனா வைரஸ் முடங்கிப் போக வைத்திருக்கும் இந்த வேளையில் கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமில் தமது நிலமை குறித்தும், தனது கருத்துகளைப் பரிமாறுகிறார்.
இவர்களைத் தொலைபேசி வழியாக நேர்கண்டவர், குலசேகரம் சஞ்சயன்.





