தாலாட்டு, கும்மி, நடவு, தெம்மாங்கு போன்ற கிராமிய பாடல்கள், கிராமத்தில் வாழும் மக்களின் படைப்பாற்றலையும், சிந்தனைகளையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கக்கூடியன, மக்களின் அன்றாட வாழ்வைப் பாட்டாகத் தருவன. கிராமியப் பாடல்களை மண்மணம் மாறாமல் நம்மிடையே கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினர் பலமேடைகளில் பாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் குலசேகரம் சஞ்சயனுடன் தனது அனுபவங்க்களைப் பகிர்ந்து கொள்கிறார். இவ்வாண்டின் சித்திரைத் திருவிழாவில் உள்ளூர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தமிழர் கண்காட்சி, இந்திய மற்றும் தமிழக உணவு வகைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன. நாள்: ஞாயிற்றுக்கிழமை, மே மாதம் 07ம் நாள் நேரம் : காலை 11 மணி முதல் மாலை 07 மணி வரை இடம் : Rose Hill Gardens (ரோஸ் ஹில் கார்டன்ஸ்), James Ruse Drive, Rosehill, NSW 2142.