தமிழ்க்கவியின் 'இனி ஒருபோதும்'....

Source: Thamil Kavi & Komagan
இலங்கை வன்னியில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் தமிழ்க்கவி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் இயங்கியவர். எழுத்துத் துறையில் மட்டுமல்லாமல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு, நாடகம், கவிதை, சட்டம் என பல துறைகளில் திறமைவாய்ந்தவர். ‘இனி வானம் வெளிச்சிரும்’ என்ற தனது முதலாவது நாவலை வெளியிட்ட தமிழ்க்கவி அவர்களின் அண்மைய வெளியீடு ‘இனி ஒரு போதும்' என்ற நாவல். இந்த நாவல் தொடர்பிலும் எழுத்தாளர் தமிழ்க்கவி தொடர்பிலும் எழுத்தாளர் கோமகன் அவர்களது கருத்துக்களுடன் விவரணம் ஒன்றைப் படைக்கிறார் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ப.தெய்வீகன்.
Share



