“இலங்கையில் போர் ஏன் நடந்தது என்பதை உலக மக்கள் அறிய வேண்டும்” – ‘மணல்’ இயக்குநர்

Dr Visakesa Chandrasekaram

Dr Visakesa Chandrasekaram

Dr விசாகேச சந்திரசேகரம் ஒரு மனித உரிமைகள் வழக்குரைஞர் மற்றும் ஒரு பன்முகக் கலைஞர். அவரது கலைப் படைப்புகளுள் Forbidden Area (தடை செய்யப்பட்ட பகுதி) என்ற நாடகம், The King and the Assassin (மன்னரும் கொலையாளியும்) என்ற புனைகதை மற்றும் Frangipani (2013), Paangshu (2018), மற்றும் மணல் (2023) என்ற மூன்று திரைப்படங்களும் அடங்கும்.


இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மூத்த விரிவுரையாளரான Dr விசாகேச சந்திரசேகரம், தற்போது நடைபெறும் சிட்னி திரைப்பட விழாவில் ஒரு நடுவராகக் கடமையாற்ற சிட்னி நகர் வந்திருக்கிறார்.

அவரது சட்ட மற்றும் அரசியல் செயல்பாடு, அவரது திரைப்படப் பணி மற்றும் குறிப்பாக சிட்னி திரைப்பட விழாவில் திரையிடப்படும் அவரது சமீபத்திய வெளியீடான மணல் திரைப்படம் குறித்து Dr விசாகேச சந்திரசேகரம் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார்.

இரண்டு பாகங்களாகப் பதிவாகியிருக்கும் நேர்காணலின் முதல் பாகம் இது.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now