தமிழ்நாட்டில் பிறந்து, கல்வி பயின்று வேலை தேடி பப்புவா நியூ கினி சென்ற சசீந்திரன் முத்துவேல் அவர்கள் இப்போது பப்புவா நியூ கினி அமைச்சராக உயர்ந்துள்ளார். பப்புவா நியூ கினி தொழில் அதிபராக உயர்ந்த சசீந்திரன் அவர்கள், தான் வாழும் மாநிலத்தின் ஆளுநராகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றியபின், தற்போது மக்கள் பணிக்காக தேசிய அரசியலில் ஈடுபட்டு தற்போது பப்புவா நியூ கினி அரசில் அமைச்சராக பணியாற்றுகிறார். மானஸ் தீவு அகதிகள், Bougainville தீவு சுதந்திரமாகும் சாத்தியம் என்று பல கேள்விகளோடு ஆஸ்திரேலியா வருகைதந்திருந்த மாண்புமிகு அமைச்சர் சசீந்திரன் அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார்: றைசெல்.
Share




