சமஸ் அவர்கள் இன்றைய தமிழ் ஊடகவியல் தளத்தில் மிகவும் குறிப்பிடும்படியான பத்திரிகையாளர்; கட்டுரையாளர்; அரசியலை மிக நுணுக்கமாகவும், ஆழமாகவும் அலசக் கூடியவர். எளிய நடையில் வலுவான கருத்துக்களை வாசகனிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்டவர். “யாருடைய எலிகள் நாம்?” எனும் அவரின் கட்டுரைத் தொகுப்புப் புத்தகம் அவரின் பரந்துபட்ட சிந்தனையின் வெளிப்பாடு. சமஸ் அவர்கள் அபூர்வமான எழுத்தின் சொந்தக்காரர் என்றும் சமகால வரலாற்றுக் களஞ்சியப் படைப்பாளி என்றும் அழியாக் குரல் என்றும் தமிழக இலக்கியவாதிகளாலும், முன்னணி எழுத்தாளர்களாலும் உச்சிமுகர்ந்து பாராட்டப்படும் இளைஞர். சமஸ் அவர்களோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடியவர்: றைசெல். பாகம் – 1.