எஸ். வி. ராஜதுரை (S. V. Rajadurai) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவர் சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் மனித உரிமை இயக்கத்தில் களப்பணி பணியாளராக செயலாற்றிய எஸ். வி. ராஜதுரை அவர்கள் ஒரு நீண்ட நேர்காணலை எமக்கு வழங்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பதிவாகியுள்ள நேர்காணலின் இறுதிப் பாகத்தில், ஒரு கல்வியாளராக தான் பெற்ற அநுபவங்கள், சாதீய முறைகள் குறித்த கருத்துகள், தற்போதைய இந்திய அரசியல், மற்றும் தமிழ் மொழி அகராதிகள் போன்ற பல விடயங்கள் குறித்து மனம் திறந்து பேசுகிறார். எஸ். வி. ராஜதுரை அவர்களை நேர்கண்டு உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன்.