இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்றாலும் தமிழ் பேசும் சமூகம் அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கியுள்ளது. அதேவேளையில் சிங்கள சமூகத்தினர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளனர். இப்படியான போக்கு எதைக் காட்டுகிறது? புதிய அதிபரான கோத்தபாய ராஜபக்ச சந்திக்கும் சவால்கள் என்ன? இந்த கேள்விகளோடு அலசுகின்றனர் இலங்கையிலிருந்து பிரபல அரசியல் ஆய்வாளர்கள் – வித்யாதரன், கருணாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் ஊடகத்தில் பணியாற்றி தற்போது கிளிநொச்சியில் வாழ்ந்துவரும் முன்னாள் போராளி தமிழ் கவி ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share




