வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கீழடி என்ற தென்னந்தோப்புகள் நிறைந்த இடத்தில், 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுகள் செய்யப்பட்டு அங்கு கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நான்காவது கட்ட அகழாய்வு, 2017ஆம் 18ஆம் ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையின் முன்னெடுப்பில் நடைபெற்றிருந்தது. அதன் முடிவுகளை, கடந்த வாரம் தமிழ் நாடு தொல்லியல்துறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அது குறித்து, தமிழ் நாடு தொல்லியல்துறையின் ஆணையர் த உதயச்சந்திரன் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான சுபாஷிணி கனகசுந்தரம் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





