நடராஜ் நர்த்தகியாகி கலை உலகில் சாதித்தார் - பாகம் 1
Narthaki Nataraj
புகழ் பெற்ற நிருத்திய சூடாமணி, கலைமாமணி தமிழிசை பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்கள் தான் நடராஜாக பிறந்திருந்தாலும் தன்னுள் இருந்த பெண்மையை உணர்ந்து அதனை நாட்டிய கலையாக வடிகால் செய்து இன்று உலகம் போற்றும் தனித்துவமான தஞ்சாவூர் பாணி பரதநாட்டியத்திலும் தமிழிசை நடனத்திலும் புகழ் பெற்று திகழ்கிறார். அவர் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள், தடைகள், சவால்கள் முதலியவற்றை மனம் திறந்து நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். அவரோடு உரையாடுபவர் நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் செல்வி. இன்றைய நிகழ்ச்சி திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களின் வாழ்க்கை பயணத்தின் முதல் பாகம்
Share



