தமிழகத்தின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தற்போது பாலியல் குற்றச்சாட்டு, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். வெளிநாடொன்றில் வாழ்ந்துவருவதாக கூறப்படும் நித்தியானந்தா தினசரி காலையில் பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் வீடியோவை தவறாமல் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டில் சேர்ந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், கைலாசா இணையதளத்தில் பதிவு செய்து தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படியாக நித்தியானந்தா குறித்த செய்திகள் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கும் பின்னணியில் நித்தியானந்தாவிடம் சீடராக இணைந்து பின்னர் அவரிடமிருந்து விலகிய மெல்பேர்னைச் சேர்ந்த ஹரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share




