கொரோனா வைரசின் Omicron வகை பரவலைத் தொடர்ந்து நாடு நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டாலும், மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தைத் தவிர்த்து பிற மாநிலங்கள், பிராந்தியங்கள் எல்லாமே இயல்பு நிலைக்கு திரும்ப முனைப்பு காட்டுகின்றன. பள்ளிக்கூடங்களை திட்டமிட்டபடி திறப்பது, உள்ளூர் மற்றும் சர்வதேச பயணங்களுக்குக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது, கோவிட் பரவலை சாதரணமாக எடுத்துக்கொள்வது என்ற நோக்கில் நாடு நகர்கிறது. ஆனால் இப்படியான பாதை சரிதானா என்ற கேள்வியுடன் ஒலிக்கும் பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டவர்கள்: சிட்னி நகரிலிருந்து ஜீவா இளையதம்பி (மேல் இடது), மெல்பன் நகரிலிருந்து குமார் (மேல் வலது), பிரிஸ்பேன் நகரிலிருந்து கண்ணன் (கீழ் வலது), அடலைட் நகரிலிருந்து ராஜூ ரங்கநாதன் (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share



