ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அமைச்சரின் பணிமனைகளுக்கு வெளியே முகாம் அமைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சனிக்கிழமை (17 ஆகஸ்ட்) தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் அடலைட் நகரிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் ஒன்றிணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து கேதீஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





