இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இளம் மருத்துவர் ஒருவரை நான்குபேர் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்து பின்னர் அவரை எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் “என்கவுன்டர்” செய்து சுட்டுக்கொன்றது. இது இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் செயல் சரியல்ல என்கிறார் வழக்கறிஞரும், திராவிடர் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அருள் மொழி அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share




