உக்ரேனில் நடந்துவரும் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக களத்தில் நின்ற கூலிப்படையான அல்லது தனியார் ராணுவமான 'வாக்னர்” படையின் தலைவர் Yevgeny Prigozhin விமான விபத்தில் உயிர் இழந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அரசுக்கு எதிராக கலகம் செய்தவர் Prigozhin என்பதால், அவரின் திடீர் இறப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து அலசுகிறார் கார்த்திக் வேலு அவர்கள். ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் அவர்கள் சமூக ஊடகங்களில் அரசியல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து தொடர்ந்து எழுதுகின்றவர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




