ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது குடியுரிமை நிலைகள் கடந்த சில மாதங்களாக செய்தி ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், மக்கள் குடியுரிமை பெறுவதைக் கடினமாக்கும் அரசின் சட்ட முன்வடிவு, பலரால் மீளாய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. குடியுரிமை பெற அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவை, ஆஸ்திரேலிய விழுமியங்கள் குறித்த மேலதி மதிப்பீடு, மற்றும் பல்கலைக்கழக நிலை ஆங்கிலப் பரீட்சையில் தேற்சி என்பன முன்மொழியப்பட்ட மாற்றங்களில் சில. நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, மற்றும் செனட் சபையில் இதன் எதிர்காலம் குறித்த கேள்வி என்பன இந்த சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து, Evan Young எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.