நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான Qantas, வருமானத்தில் 2.7 பில்லியன் டொலர் இழப்பை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் COVID-19 தொற்று நோய் காரணமாக விமானப் பயணங்களின் வீழ்ச்சியை இது பிரதிபலிக்கிறது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்னர் சர்வதேச பயணங்கள் நடக்கும் என Qantas எதிர்பார்க்கவில்லை. ஆனால், மாநிலங்களுக்கிடையிலான எல்லைகள் பல மூடப்பட்டிருப்பதால் உள்நாட்டு பயணங்களும் தடைப்பட்டுள்ளன. நிலமையை சீரமைக்க உடனடி நடவடிக்கை வேண்டும் என்று Qantas கோருகிறது.
இது குறித்து Matt Connellan எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





