Punitha Pandiyan, Pandit Rishikesh Bhattar, K T M Iqbal (Top, L – R); Shivacharya Ravi Gurukkal, Fr. Ravichandran Emmanuel (Bottom, L – R) Source: SBS Tamil
தீபாவளி என்றால், 'விளக்குகளின் வரிசை' என்று பொருள்படும். தீபாவளி பண்டிகையை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமண சமயத்தவர் ஆண்டுதோறும் கொண்டாடும் ஒரு விழா ஆகும். தீபாவளியை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று, பல்வேறு மதத் தலைவர்கள் மற்றும் அதனைப் பின்பற்றுபவர்களிடம் கேட்டு, நிகழ்ச்சி தயாரித்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். இதில் கருத்தைப் பதிந்தவர்கள்: 1986ம் ஆண்டிலிருந்து ஹெலன்ஸ்ஸ்பர்க் சிறீ வெங்கடேஷ்வரர் ஆலயத்தில் தலைமை மதகுருவாகப் பணியாற்றிய ரிஷிகேஷ் பட்டர்; சிட்னி முருகன் கோவிலில் 9 ஆண்டுகள் கடமையாற்றிய சிவாச்சாரியர் ரவி குருக்கள்; தலித் முரசு ஆசிரியரும், பௌத்த மதத்தைப் பின்பற்றும் தமிழருமான புனித பாண்டியன்; சிங்கப்பூர் அரசாங்கத்தின் மிக உயர்ந்த கலாச்சார விருதைப் பெற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளரான இஸ்லாமியர் K T M இக்பால்; மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டதில் கிறிஸ்தவ மதகுருவாகக் கடமையாற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன் இம்மானுவேல்.