சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் மயிலு கணேசரட்ணம் - நினைவுப் பகிரல்

Source: Getty
இலங்கையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் மயிலு கணேசரட்ணம் அவர்கள் காலமானார். தொண்ணூறுகளில் யாழ் மண் போர்ச் சூழலில் கிடந்த போது, பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் மக்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கையாக டாக்டர் மயிலு கணேசரட்ணம் அவர்கள் அந்த மண்ணோடு, மக்களோடு இருந்தார். பெரும் சமர்களில் விழுப்புண் அடைந்த பல நூற்றுக்கணக்கான போராளிகளின், மக்களின் உயிர் காத்தவர் அவர். காலஞ்சென்ற சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் மயிலு கணேசரட்ணம் அவர்கள் பற்றிய நினைவுப் பகிரல் - வழங்குகிறார் சிட்னியில் தற்போது வசித்துவரும் Dr Ramanee Seermaran அவர்கள்.
Share



