அமெரிக்காவுடன் ஐக்கியமாகிறது யாழ்ப்பாணம்
SBS Tamil Source: SBS Tamil
இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணமும் ஒரு இரட்டை நகர் அல்லது நட்பு நகரைத் தன்னுடன் இணைக்கவுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள Sterling Heights என்ற நகரம் இதற்கான முடிவை அண்மையில் எடுத்துள்ளது.யாழ்ப்பாணத்தைத் தனது இரட்டை நகர் அல்லது நட்பு நகராக, Sterling Heights என்ற நகரம் தெரிவு செய்வதற்கு, அந்த நகரத்தில் வாழும் சுப்பிரமணியம் மணிவண்ணன் என்பவர் உழைத்திருக்கிறார். மணிவண்ணன் மற்றும் யாழ்ப்பாண நகரின் commissioner ஆகக் கடமையாற்றும் வாகீசன் ஆகியோரின் கருத்துகளுடன், இது குறித்த நிகழ்ச்சி படைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share


