Federal அரசால் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டத்தின் கீழ் சர்வதேச மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படவுள்ளது அல்லது வரம்பு நிர்ணயிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையின் அதிகபட்ச எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு கல்வி வழங்குநர்களை அதாவது பல்கலைக்கழகங்கள் /TAFE போன்றவற்றினைக் கல்வி அமைச்சர் கோர முடியும். அந்த வரம்பிற்கு மேல் சர்வதேச மாணவர்களைச் சேர்க்க விரும்பினால், அவர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாணவர் விடுதியை உருவாக்க வேண்டும். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் பிரபல ஒலிபரப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.
Share





