3வது முறையாக மாற்றுத்திறனாளர்களுக்கான செஸ் உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்று திரும்பியிருக்கிறார் திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த மாற்றுதிறனாளி பெண்ணான ஜெனிதா அண்டோ. ஜெனிதாவுக்கு மூன்று வயதில் ஏற்பட்ட போலியோ நோயால் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை செயலிழந்தது. ஆனாலும் அவர் முடங்கிவிடவில்லை. 3 வயதில் தனது தந்தையின் தோளில் பயணிக்க ஆரம்பித்து, வெற்றியை தனதாக்கி கொண்டே இருக்கிறார். தனது வெற்றி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் ஜெனிதா. அவரோடு உரையாடுபவர் செல்வி
Share




