இலங்கையில் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி (New Democratic Front) சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். சிறீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியின் சார்பில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுகிறார். தமிழ்தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு சரிதானா என்று அலசுகிறார் அயர்லாந்து நாட்டின் Griffith College யில் பணியாற்றும் கல்வியாளர் முனைவர் தமிழ்வேந்தன் ஆனந்தவினாயகம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share




