கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட வில்லிசையில் வித்தகம் புரிந்து கொண்டிருக்கிற அரிதான பெண்மணி திருமதி பாரதி திருமகன். பிரபல வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகளான இவர், சுமார் முப்பதாயிரம் மேடைகள் கண்ட வில்லிசை வித்தகி மட்டுமின்றி சொல்லிசையிலும் சிறந்து விளங்குபவர். அவரை தொலைபேசி வழியாக நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன். இரண்டு பாகங்களாக ஒலியேறும் இந்த நேர்காணலின் இறுதிப் பகுதியில், அவரது முழுக் குடும்பமே இந்த வில்லுப்பாட்டுக் கலையை எப்படி தொடர்ந்து காத்து வருகிறது என்பதை விவரிக்கிறார்.