தமிழ்நாட்டில் சுஜித் எனும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 82 மணிநேரங்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்டான். அரசும், அதிகாரிகளும், மீட்புப் பணியாளர்களும் எவ்வளவோ முயன்றும் சுஜித்தை காப்பாற்ற இயலவில்லை. இந்த பின்னணியில் சுஜித்தை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்க தான் கண்டுபிடித்த கருவி மூலம் இந்த பணியில் தீவிரமாக செயல்பட்டு, தனது முயற்சியில் தோல்விகண்டுள்ளார் நாமக்கல்லைச் சார்ந்த வெங்கடேஷ் அவர்கள். ஏன் சுஜித்தை தங்களால் காப்பாற்ற இயலவில்லை என்று மனச்சோர்வில் இருக்கும் வெங்கடேஷ் அவர்கள் நமக்காக விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share




