விகடகவி... இந்த சொல்லை பின் இருந்து முன் சொன்னாலும் விகடகவி என்று தான் சொல்லப்படும். ஆனால், ஒரு வார்த்தையை மட்டுமல்ல, முழு வசனங்கள், ஏன் 200க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட புத்தகத்தையே பின் இருந்து முன் வாசிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டவர் திருப்பூரைச் சேர்ந்த மனோன்மணி முருகேசன். அது மட்டுமல்ல, திரையிசைப் பாடல்களையும் அப்படி தலைகீழாகப் பாடுகிறார் இவர். இவரது காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இப்படிப் பேச, மனோன்மணி முருகேசன் எங்கு கற்றுக் கொண்டார் என்பதிலிருந்து அவரது எதிர்காலக் கனவுகள் வரை, அவரிடமே கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




