சமீபத்தில், தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ளவர்கள் மீதான கொள்கையை அரசு மாற்றியது நாம் அறிந்த செய்தி. இந்த கொள்கை மாற்றத்தைத் தொடர்ந்து, சுமார் 19,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ‘Fast Track Program’ என்ற செயல்முறை மூலம் புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்ட பலர், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் மேன் முறையீடு பரிசீலனையில் உள்ளவர்கள் இதில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை.
அப்படியானவர்கள் இருவர், தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை எம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




