கொரோனா கட்டுப்பாடுகளை மீறி குயின்ஸ்லாந்து சென்ற மெல்பன் தம்பதியருக்கு $8000 அபராதம்!

கொரோனா கட்டுப்பாடுகளைமீறி மெல்பனிலிருந்து குயின்ஸ்லாந்துக்குள் நுழைந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் தலா 4000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

A Queensland police officer stops a motorist at a checkpoint at Coolangatta on the Queensland-New South Wales border, Friday, May 22, 2020.

A Queensland police officer stops a motorist at a checkpoint at Coolangatta on the Queensland-New South Wales border, Friday, May 22, 2020. Source: AAP

மெல்பனில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோது குறித்த பெண்ணும் அவரது கணவரும் நியூ சவுத் வேல்ஸ் வழியாக குயின்ஸ்லாந்துக்கு சென்றிருந்தனர்.

குயின்ஸ்லாந்தின் Caloundra பகுதியிலுள்ள குடும்பத்தினருடன் இவர்கள் இருவரும் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அத்துடன் குறித்த தம்பதியர் சென்றுவந்த இடங்களின் பட்டியலை வெளியிட்ட குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறையினர் அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

இவர்கள் இருவரும் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலும் சில நாட்களை செலவிட்டிருந்ததால் அங்கும் பல இடங்களுக்கு கோவிட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தப்பின்னணியில் குறித்த தம்பதியர் பொய்யான தகவல்களை வழங்கி அதன்மூலம் குயின்ஸ்லாந்துக்குள் நுழைவதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றிருந்தமை தெரியவந்ததாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த தம்பதியருக்கு சுமார் 8000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க குயின்ஸ்லாந்து Cairns-இல் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து தப்பியோட முயற்சித்தார் என்று கூறப்படும் விக்டோரிய நபர் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இன்று காலை குயின்ஸ்லாந்து வந்திறங்கிய குறிப்பிட்ட விக்டோரிய நபர், கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அங்கிருந்து balcony வழியாக கீழே இறங்கமுயற்சித்தபோது இவர் கீழே விழுந்து காலில் அடிபட்டுக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Cairns வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நபர் குறித்தும் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்திவருவதாக பொலீஸார் தெரிவித்துள்னர்.

தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறிய குறித்த நபருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Renuka

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand