தமிழ்நாட்டில் கொரோனா தாக்கத்தினால் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலரின் உடல்களை யாரும் புதைக்க அல்லது எரிக்க முன்வராத நிலையில் திருநெல்வேலியில் வாழும் எஸ்.எஸ். அப்துல் கரீம் கனி அவர்களும் அவர் சார்ந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சார்ந்த நண்பர்களும் இணைந்து 300க்கும் மேற்பட்ட உடல்களை அவர்களின் மத நம்பிக்கைப்படி நல்லடக்கம் செய்துள்ளனர். இந்த அரும்பணி தொடர்கிறது. கனி அவர்களின் சேவையை பாராட்டி நெல்லை மாவட்ட தொழில் வர்த்தகர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு விருது வழங்கி பாராட்டினார். இததகைய மனிதநேயப்பணி எப்படி சாத்தியமாகிறது என்று தனது அனுபவத்தை கனி அவர்கள் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




